என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தத்தில் தினகரன் ஆதரவு பெண் எம்.எல்.ஏ. பேனர் மீண்டும் கிழிப்பு
Byமாலை மலர்8 Aug 2017 1:11 PM GMT (Updated: 8 Aug 2017 1:12 PM GMT)
குடியாத்தத்தில் தினகரன் ஆதரவு பெண் எம்.எல்.ஏ. பேனர் மீண்டும் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம்:
அ.தி.மு.க. அம்மா அணியில் 60 பேருக்கு, கட்சியில் புதிய பதவி வழங்கி துணை பொதுச் செயலாளர் டி.டி.தினகரன் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளராகவும், பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. புரட்சி தலைவி பேரவை இணை செயலாளராகவும், ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. மகளிரணி இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏவுக்கு மகளிர் அணி இணை செயலாளராக புதிய பதவி வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.
பேனரில் சசிகலா, தினகரன் மற்றும் ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. படம் இடம் பெற்றிருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், பேனர் மீது கல்வீசி தாக்கினர்.
கல் வீசியதில் பேனரில் இருந்த சசிகலா படம் கிழிந்தது. இது குறித்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கல்வீசியதில் சேதமடைந்த பேனரை ஒட்டி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மீண்டும் அந்த பேனரை பிளேடால் சரமாரியாக வெட்டி கிழித்துள்ளனர். பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டிருப்பதை பார்த்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடியாத்தம் பகுதி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஜெயந்தி பத்ம நாபன் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ. தரப்பினர் பேனர் கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினரியே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அ.தி.மு.க. அம்மா அணியில் 60 பேருக்கு, கட்சியில் புதிய பதவி வழங்கி துணை பொதுச் செயலாளர் டி.டி.தினகரன் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளராகவும், பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. புரட்சி தலைவி பேரவை இணை செயலாளராகவும், ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. மகளிரணி இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏவுக்கு மகளிர் அணி இணை செயலாளராக புதிய பதவி வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.
பேனரில் சசிகலா, தினகரன் மற்றும் ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. படம் இடம் பெற்றிருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், பேனர் மீது கல்வீசி தாக்கினர்.
கல் வீசியதில் பேனரில் இருந்த சசிகலா படம் கிழிந்தது. இது குறித்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கல்வீசியதில் சேதமடைந்த பேனரை ஒட்டி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மீண்டும் அந்த பேனரை பிளேடால் சரமாரியாக வெட்டி கிழித்துள்ளனர். பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டிருப்பதை பார்த்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடியாத்தம் பகுதி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஜெயந்தி பத்ம நாபன் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ. தரப்பினர் பேனர் கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினரியே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X