என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபழனியில் துணிகரம்: மின்வாரிய அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்27 July 2017 3:19 AM GMT (Updated: 27 July 2017 3:19 AM GMT)
வடபழனியில் மின்வாரிய அதிகாரியின் வீட்டில் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு:
சென்னை வடபழனி, ராகவன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). மின்வாரிய உதவி பொறியாளராக இருக்கிறார். அவரது மனைவி ரேணுகா (43).
நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, வட பழனி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். காலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 100 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனி, ராகவன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). மின்வாரிய உதவி பொறியாளராக இருக்கிறார். அவரது மனைவி ரேணுகா (43).
நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, வட பழனி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். காலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 100 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X