search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபா டெல் ரே: மெஸ்சியின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    கோபா டெல் ரே: மெஸ்சியின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

    கோபா டெல் ரே கால்பந்து தொடரில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் 5-0 என செல்டா விகோ அணியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #Messi #barcelona #CopaDelRey
    ‘கோபா டெல் ரே’ கோப்பைக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா செல்டா விகோ அணியுடன் மோதியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரண்டு அணிகளும் லெக்-1, லெக்-2 என இரண்டு முறை மோத வேண்டும். செல்டா விகோவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் பார்சிலோனாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிய செல்டா விகோ 1-1 என போட்டியை டிரா செய்தது.



    இந்நிலையில் இன்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் லெக்-2 ஆட்டம் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 13-வது மற்றும் 15-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.



    28-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பா ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 4-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் 87-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இவான் ராகிடிக் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 5-0 என வெற்றி பெற்றது. முதல் லெக்-ஐயும் சேர்த்து 6-1 என பார்சிலோனா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×