என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித் சர்மா ‘சிறந்த நைட்வாட்ச்மேன்’ என ட்ரோல் செய்த ரசிகர்கள்
Byமாலை மலர்6 Jan 2018 1:09 PM GMT (Updated: 6 Jan 2018 2:19 PM GMT)
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 59 பந்தில் 11 ரன்கள் எடுத்த ரோகித் சர்மாவை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். #SAvIND #RohitSharma
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல்அவுட் ஆகிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.
இந்தியா 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அப்போது புஜாராவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார் ரோகித் சர்மா.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாராவுடன் இணைந்து ரோகித் சர்மா மிகவும் மந்தமாக விளையாடினார். ரன்கள் அடிக்க திணறினார். 59 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
இந்தியாவில் இரட்டை சதம், அதிவேக சதம் என அடித்துவிட்டு தென்ஆப்பிரிக்காவில் திணறியதால் ரோகித் சர்மா மீது ரசிகர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் டுவிட்டரில் ரசிகர்கள் அவரை சிறந்த நைட்வாட்ச்மேன் என்று ட்ரோல் செய்துள்ளனர்.
ரசிகர்கள் டுவிட்டரில் ‘‘வேகப்பந்து வீச்சை ஒரு மணி நேரமாக தாக்குப்பிடித்தார். இதனால் இந்தியா கடந்த முப்பது ஆண்டுகளில் சிறந்த நைட்வாட்ச்மேனை தயார் செய்துள்ளதாக நினைக்கிறேன்’’ என்று ஒரு ரசிகரும்
மற்றொரு ரசிகர் ‘‘புஜாரா பொறுமையாக விளையாடிய அதேநேரத்தில், ரோகித் சர்மாவை பார்க்கும்போது நைட்வாட்ச்மேன் போன்று தோன்றியது’’ என்றும், ‘‘இது உங்களுக்கு ‘டெஸ்ட் (பரிசோதனை)’ கிரிக்கெட் மிஸ்டர் ரோகித் சர்மா’’ என்றும்,
‘‘கவலைப்படாதீர்கள் ரோகித் சர்மா, நீங்கள் இந்தியாவிற்கு திரும்பி, பிளாட் பிட்சியில் அர்த்தமற்ற ஒருநாள் போட்டியில் இன்னொரு இரட்டை சதம் அடிக்க முடியும். உங்களுக்க்கென்ற கூட்டம் செம்மறி ஆட்டுக்கூட்டம் போன்று பின்னால் வருவார்கள்’’ என்றும்,
‘‘கருண்நாயர் முச்சதம் அடித்தபிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ரகானேயின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்று கேப்டன் கூறினார். தற்போது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை. வெளிநாட்டு மண்ணில் ரகானேயின் பங்களிப்பு என்ன ஆயிற்று?’’ என்றும், ட்ரோல் செய்துள்ளனர்.
இந்தியா 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அப்போது புஜாராவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார் ரோகித் சர்மா.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாராவுடன் இணைந்து ரோகித் சர்மா மிகவும் மந்தமாக விளையாடினார். ரன்கள் அடிக்க திணறினார். 59 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
இந்தியாவில் இரட்டை சதம், அதிவேக சதம் என அடித்துவிட்டு தென்ஆப்பிரிக்காவில் திணறியதால் ரோகித் சர்மா மீது ரசிகர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் டுவிட்டரில் ரசிகர்கள் அவரை சிறந்த நைட்வாட்ச்மேன் என்று ட்ரோல் செய்துள்ளனர்.
ரசிகர்கள் டுவிட்டரில் ‘‘வேகப்பந்து வீச்சை ஒரு மணி நேரமாக தாக்குப்பிடித்தார். இதனால் இந்தியா கடந்த முப்பது ஆண்டுகளில் சிறந்த நைட்வாட்ச்மேனை தயார் செய்துள்ளதாக நினைக்கிறேன்’’ என்று ஒரு ரசிகரும்
மற்றொரு ரசிகர் ‘‘புஜாரா பொறுமையாக விளையாடிய அதேநேரத்தில், ரோகித் சர்மாவை பார்க்கும்போது நைட்வாட்ச்மேன் போன்று தோன்றியது’’ என்றும், ‘‘இது உங்களுக்கு ‘டெஸ்ட் (பரிசோதனை)’ கிரிக்கெட் மிஸ்டர் ரோகித் சர்மா’’ என்றும்,
‘‘கவலைப்படாதீர்கள் ரோகித் சர்மா, நீங்கள் இந்தியாவிற்கு திரும்பி, பிளாட் பிட்சியில் அர்த்தமற்ற ஒருநாள் போட்டியில் இன்னொரு இரட்டை சதம் அடிக்க முடியும். உங்களுக்க்கென்ற கூட்டம் செம்மறி ஆட்டுக்கூட்டம் போன்று பின்னால் வருவார்கள்’’ என்றும்,
‘‘கருண்நாயர் முச்சதம் அடித்தபிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ரகானேயின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்று கேப்டன் கூறினார். தற்போது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை. வெளிநாட்டு மண்ணில் ரகானேயின் பங்களிப்பு என்ன ஆயிற்று?’’ என்றும், ட்ரோல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X