என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன், நெஹ்ரா நியமனம்
Byமாலை மலர்2 Jan 2018 12:47 PM GMT (Updated: 2 Jan 2018 12:47 PM GMT)
ஐபில் டி20 லீக் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன், நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். #IPL #RCB #Nehra #GaryKirsten
ஐபில் டி20 லீக் தொடர் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு 11-வது வருடத்தில் கால் எடுத்து வைக்கிறது. இதில் பல்வேறு மாற்றங்களை ஐபிஎல் நிர்வாகக்குழு கொண்டு வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள அணிகள் யார் யாரை தக்க வைத்துள்ளது என்பதை வரும் 4-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆன கேரி கிர்ஸ்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளோம் என்பதை தெரிவித்துள்ளது.
இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும்போது தலைமை பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன். தற்போது ஆர்சிபி அணியின் ஆலேசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷிஸ் நெஹ்ரா இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் சமீபத்தில்தான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். 17 வருடமாக இந்திய அணிக்காக விளையாடிய இவர், பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தலைமை பயிற்சியாளர் பதவியில் நீடிக்கிறார். ஆனால் ஆர்சிபி அணி எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை தெரியவில்லை. #IPL #RCB #Nehra #GaryKirsten
ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள அணிகள் யார் யாரை தக்க வைத்துள்ளது என்பதை வரும் 4-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆன கேரி கிர்ஸ்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளோம் என்பதை தெரிவித்துள்ளது.
இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும்போது தலைமை பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன். தற்போது ஆர்சிபி அணியின் ஆலேசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷிஸ் நெஹ்ரா இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் சமீபத்தில்தான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். 17 வருடமாக இந்திய அணிக்காக விளையாடிய இவர், பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தலைமை பயிற்சியாளர் பதவியில் நீடிக்கிறார். ஆனால் ஆர்சிபி அணி எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை தெரியவில்லை. #IPL #RCB #Nehra #GaryKirsten
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X