search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, ரோகித் சர்மாவை பாராட்டிய சத்யா நாதெள்ளா
    X

    விராட் கோலி, ரோகித் சர்மாவை பாராட்டிய சத்யா நாதெள்ளா

    மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
    இந்திய வம்சாவளியான சத்யா நாதெள்ளா புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணிபுரிந்து வருகிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலையிலும் நாதெள்ளா, அவ்வப்போது கிரிக்கெட் போட்டியை பார்ப்பதும் உண்டாம்.

    சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டிளித்தார். முன்னணி தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளார்.



    இருவரையும் குறித்து சத்யா நாதெள்ளா கூறுகையில் ‘‘துரதிருஷ்டவசமாக நான் அதிக நேரம் செலவழிப்பதில்லை. ஆனால் ஆன்லைனில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதுண்டு. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். விராட் கோலி மிகவும் சிறந்த வீரர்.



    ரோகித் சர்மாவின் ஆட்டத்தை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன். அவரது கவர் ட்ரைவ் சிறப்பாக இருக்கும். அவர் எனக்கு விவிஎஸ் லஷ்மணை ஞாபகப்படுத்துகிறார்’’ என்றார்.
    Next Story
    ×