என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி
Byமாலை மலர்25 Sep 2017 12:29 AM GMT (Updated: 25 Sep 2017 12:29 AM GMT)
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
புதுடெல்லி:
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
5-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 92-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை ஆல்-அவுட் ஆக்கியதுடன் முதல் பாதியில் 18-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.
பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்ததுடன், 7 நிமிடங்கள் இருந்த போது 27-24 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையும் பெற்றனர். கடைசி நிமிடம் வரை முன்னிலை தொடர்ந்ததால், இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வீழ்ந்து விடுமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆட்ட நேரம் நிறைவடைய வெறும் 5 வினாடி மட்டுமே இருந்த போது, தமிழ் தலைவாஸ் ஒரு புள்ளி பின்தங்கி இருந்தது. இறுதியாக கேப்டன் அஜய் தாகூர் ரைடுக்கு சென்றார். பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பெங்காலுக்கு அதிர்ச்சி அளித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 3-வது வெற்றியாகும். 18-வது லீக்கில் விளையாடிய பெங்கால் அணிக்கு 5-வது தோல்வியாகும்.
புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
5-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 92-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை ஆல்-அவுட் ஆக்கியதுடன் முதல் பாதியில் 18-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.
பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்ததுடன், 7 நிமிடங்கள் இருந்த போது 27-24 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையும் பெற்றனர். கடைசி நிமிடம் வரை முன்னிலை தொடர்ந்ததால், இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வீழ்ந்து விடுமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஆட்ட நேரம் நிறைவடைய வெறும் 5 வினாடி மட்டுமே இருந்த போது, தமிழ் தலைவாஸ் ஒரு புள்ளி பின்தங்கி இருந்தது. இறுதியாக கேப்டன் அஜய் தாகூர் ரைடுக்கு சென்றார். பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பெங்காலுக்கு அதிர்ச்சி அளித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 3-வது வெற்றியாகும். 18-வது லீக்கில் விளையாடிய பெங்கால் அணிக்கு 5-வது தோல்வியாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X