என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்: மலிங்கா
Byமாலை மலர்2 Sep 2017 9:05 AM GMT (Updated: 2 Sep 2017 9:05 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.
கொழும்பு:
கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நான் நன்றாக விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் முடிந்ததும் என்னை பற்றி நானே சுய மதிப்பீடு செய்வதோடு, இன்னும் எத்தனை காலம் என் உடல் விளையாடுவதற்கு ஒத்துழைக்கும் என்று சோதிக்க உள்ளேன். நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும், அணிக்காக போட்டியை வெற்றி பெற செய்ய முடியவில்லை என்றாலோ?, அணிக்கு தேவையானதை செய்ய முடியவில்லை என்றாலோ அணியில் தொடர்ந்து இருப்பதில் என்ன பலன்?. 19 மாதங்களுக்கு பிறகு ஆட்டத்துக்கு திரும்பி இருக்கும் நான் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் பார்முக்கு திரும்ப முடியுமா? என்று பார்க்க போகிறேன். வருங்காலத்தில் எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்பேன். உடல் ஒத்துழைக்காமல் போனாலோ?, அணியின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலோ கிரிக்கெட்டில் இருந்து மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவேன்.
இவ்வாறு மலிங்கா கூறினார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நான் நன்றாக விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் முடிந்ததும் என்னை பற்றி நானே சுய மதிப்பீடு செய்வதோடு, இன்னும் எத்தனை காலம் என் உடல் விளையாடுவதற்கு ஒத்துழைக்கும் என்று சோதிக்க உள்ளேன். நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும், அணிக்காக போட்டியை வெற்றி பெற செய்ய முடியவில்லை என்றாலோ?, அணிக்கு தேவையானதை செய்ய முடியவில்லை என்றாலோ அணியில் தொடர்ந்து இருப்பதில் என்ன பலன்?. 19 மாதங்களுக்கு பிறகு ஆட்டத்துக்கு திரும்பி இருக்கும் நான் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் பார்முக்கு திரும்ப முடியுமா? என்று பார்க்க போகிறேன். வருங்காலத்தில் எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்பேன். உடல் ஒத்துழைக்காமல் போனாலோ?, அணியின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலோ கிரிக்கெட்டில் இருந்து மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவேன்.
இவ்வாறு மலிங்கா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X