என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து: கவுண்டி கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்குகிறார் புஜாரா
Byமாலை மலர்23 Aug 2017 12:10 PM GMT (Updated: 23 Aug 2017 12:10 PM GMT)
இந்திய வீரர் புஜாரா, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக மீண்டும் விளையாட உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா. தற்போது நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா, ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
அதைத்தொடர்ந்து, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் மறுபடியும் விளையாட உள்ளார்.
ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில், நாட்டிங்காம்ஷைர் அணிக்காக புஜாரா விளையாடினார். இப்போது மீண்டும் அதே அணிக்காக களமிறங்க உள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு பேசிய புஜாரா, “மேலும் சில கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். கவுண்டியில் விளையாடியது எனக்கு உதவியாக இருந்தது. இங்கிலாந்தில் உள்ள மைதானங்கள் கடினமானவை. அவற்றில் விளையாடுவதன் மூலம் எனது பேட்டிங் திறமை அதிகரித்தது” என கூறியிருந்தார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள மற்றொரு இந்திய முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X