என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 137 ரன் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
Byமாலை மலர்18 Aug 2017 4:11 PM GMT (Updated: 18 Aug 2017 4:11 PM GMT)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நெல்லை:
8 அணிகள் பங்கேற்ற 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்நிலையில், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று நெல்லையில் மோதின.
டாசில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முரளி விஜய், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்ய பிரகாசும், முரளி விஜயும் களமிறங்கினர்.
ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கோவை கிங்ஸ் அணியினர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
முதலில் சூர்யபிரகாஷ் 4 ரன்னுக்கும், அனிருத் சீதாராம் 19 ரன்னுக்கும், முரளி விஜய் 24 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த அக்ஷய் சீனிவாசன், ரவிகுமார் ரோஹித் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். கோவை
கிங்ஸ் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் களமிறங்கிய மொகமது அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 96 ஆக இருந்தது.
அப்போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின், கோவை கிங்ஸ் அணியினர் அடித்து விளையாடினர். 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிக்குமார் 32 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சாய் கிஷோர், அலெக்சாண்டர், அந்தோனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அருண்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 137 ரன்களை இலக்காக கொண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
8 அணிகள் பங்கேற்ற 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்நிலையில், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று நெல்லையில் மோதின.
டாசில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முரளி விஜய், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்ய பிரகாசும், முரளி விஜயும் களமிறங்கினர்.
ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கோவை கிங்ஸ் அணியினர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
முதலில் சூர்யபிரகாஷ் 4 ரன்னுக்கும், அனிருத் சீதாராம் 19 ரன்னுக்கும், முரளி விஜய் 24 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த அக்ஷய் சீனிவாசன், ரவிகுமார் ரோஹித் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். கோவை
கிங்ஸ் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் களமிறங்கிய மொகமது அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 96 ஆக இருந்தது.
அப்போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின், கோவை கிங்ஸ் அணியினர் அடித்து விளையாடினர். 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிக்குமார் 32 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சாய் கிஷோர், அலெக்சாண்டர், அந்தோனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அருண்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 137 ரன்களை இலக்காக கொண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X