search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் இன்று தொடங்குகிறது
    X

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் இன்று தொடங்குகிறது

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

    ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இது பகலிரவு டெஸ்ட் என்பது கவனத்துக்குரிய அம்சமாகும். மின்னொளியில் நடக்க இருப்பதால் பிரத்யேக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 4 பகலிரவு போட்டிகள் நடந்துள்ளது. ஆனால், இங்கிலாந்து அணி மின்னொளியின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் மேற்கிந்திய தீவுகளுக்கு ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்டில் ஆடிய அனுபவம் உண்டு.

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவை 3–1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×