என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபி 2-வது பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் நாளை மோதல்
Byமாலை மலர்29 May 2017 5:37 AM GMT (Updated: 29 May 2017 5:37 AM GMT)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதி சந்திக்கிறது. 8-ந்தேதி இலங்கையுடனும், 11-ந்தேதி தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகிறது.
இந்தப்போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 45 ரன்னில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. ரோஞ்சி அதிகபட்சமாக 66 ரன்னும், நீசம் 46 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதி பின்பற்றப்பட்டது. 26 ஓவர்களில் இந்திய அணி 85 ரன் தான் இலக்கு. 129 ரன் எடுத்து இருந்ததால் 45 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி 53 ரன்னும் (அவுட் இல்லை) தவான் 40 ரன்னும் எடுத்தனர்.
பயிற்சி ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதி சந்திக்கிறது. 8-ந்தேதி இலங்கையுடனும், 11-ந்தேதி தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகிறது.
இந்தப்போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 45 ரன்னில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. ரோஞ்சி அதிகபட்சமாக 66 ரன்னும், நீசம் 46 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதி பின்பற்றப்பட்டது. 26 ஓவர்களில் இந்திய அணி 85 ரன் தான் இலக்கு. 129 ரன் எடுத்து இருந்ததால் 45 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி 53 ரன்னும் (அவுட் இல்லை) தவான் 40 ரன்னும் எடுத்தனர்.
பயிற்சி ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X