search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் மொகமது ஷமி சிறந்த பந்து வீச்சாளர்: சோயிப் மாலிக் சொல்கிறார்
    X

    இந்திய அணியில் மொகமது ஷமி சிறந்த பந்து வீச்சாளர்: சோயிப் மாலிக் சொல்கிறார்

    இந்திய அணியில் மொகமது ஷமி சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.
    இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளன. 4-ந்தேதி லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சாம்பியன்ஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேச்சு எழுந்துள்ளது. யார் வெற்றி பெறுவார்கள். பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துமா? இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்று பேசப்பட்டு வருகிறது.

    வீரர்களும் இந்த போட்டி குறித்து பேசி வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ பேட்ஸ்மேன் சோயிப் மாலிக், மொகமது ஷமிதான் இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர் மொகமது ஷமி. அவர் முஸ்லிம் என்பதற்காக நான் சொல்லவில்லை. அவரது பந்து வீச்சை பார்த்திருக்கிறேன். அதேபோன்று அவரது பந்து வீச்சை சந்தித்திருக்கிறேன். எனக்கு அவரது பந்து வீச்சை சந்திப்பது கடினமாக இருந்தது.

    இந்திய அணியின் அனைத்து வீரர்களும் எனக்கு சிறந்த நண்பர்கள். ஏனென்றால், எல்லோரும் என் வயதுடைய வீரர்கள். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக அதிக அளவில் விளையாடியுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×