என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த நான்கு மாதமாக ஆதரவு தந்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி: வார்னர்
Byமாலை மலர்18 May 2017 12:36 PM GMT (Updated: 18 May 2017 12:36 PM GMT)
கடந்த நான்கு மாதமாக ஆதரவு அளித்த ஒவ்வொரு இந்திய ரசிகர்களுக்கும் எனது குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தபோது தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்தார் வார்னர். நான்கு போட்டிகள் முடிந்தவுடன், ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்தது.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று வரை வார்னர் பங்கேற்று விளையாடினார். இதனால் சுமார் நான்கு மாத காலம் இந்தியாவில் தங்கியிருந்தார். ஓய்வின்போது தனது குடும்பத்திருடன் பல இடங்களை சுற்றிப் பார்த்த்தார். அப்போது இந்தியர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். அத்துடன் வார்னர் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்த இந்த நான்கு மாதம் தனக்கு ஆதரவு அளித்த இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னர் இன்ஸ்டாகிராமில் தனது குடும்பப் படத்தை வெளியிட்டு, அதில் ‘‘இந்தியாவில் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருப்பதற்கு காரணமாக இருந்த ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றி. நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.
ஐதராபாத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் அடையாததற்கு எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த வருடம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். இறுதிப் போட்டிக்காக காத்திருக்கும் அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இல்லாமல் விளையாட முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று வரை வார்னர் பங்கேற்று விளையாடினார். இதனால் சுமார் நான்கு மாத காலம் இந்தியாவில் தங்கியிருந்தார். ஓய்வின்போது தனது குடும்பத்திருடன் பல இடங்களை சுற்றிப் பார்த்த்தார். அப்போது இந்தியர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். அத்துடன் வார்னர் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்த இந்த நான்கு மாதம் தனக்கு ஆதரவு அளித்த இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னர் இன்ஸ்டாகிராமில் தனது குடும்பப் படத்தை வெளியிட்டு, அதில் ‘‘இந்தியாவில் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருப்பதற்கு காரணமாக இருந்த ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றி. நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.
ஐதராபாத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் அடையாததற்கு எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த வருடம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். இறுதிப் போட்டிக்காக காத்திருக்கும் அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இல்லாமல் விளையாட முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X