search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தப்பா மீது தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும்: காம்பீர் சொல்கிறார்
    X

    உத்தப்பா மீது தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும்: காம்பீர் சொல்கிறார்

    சிறப்பாக விளையாடி வரும் உத்தப்பா மீது இந்திய தேசிய அணி தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் ராபின் உத்தப்பா திகழ்ந்து வருகிறார். பேட்டிங்கில் மட்டும் அல்லாமல், விக்கெட் கீப்பர் பணியையும் சிறப்பாக செய்து வருகிறார். புனே அணிக்கெதிராக மூன்று வீரர்களை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். பேடடிங்கில் 87 ரன்கள் குவித்தார். நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிராகவும் அரைசதம் அடித்தார்.

    இவ்வாறு பேட்டிங் மற்றும் கீப்பிங் பணியில் சிறப்பாக செயல்படும் உத்தப்பா மீது இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டார். மூன்று ஸ்டம்பிங் ஆட்டத்தை எங்கள் பக்கம் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது. அதிரடியாக விளையாடும் டெக்னிக்கை பெற்றுள்ளார். அவர் பந்தை நேராக ஆக அடிக்கும் திறன் பெற்றுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×