என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தப்பா மீது தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும்: காம்பீர் சொல்கிறார்
Byமாலை மலர்29 April 2017 5:10 PM GMT (Updated: 29 April 2017 5:10 PM GMT)
சிறப்பாக விளையாடி வரும் உத்தப்பா மீது இந்திய தேசிய அணி தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் ராபின் உத்தப்பா திகழ்ந்து வருகிறார். பேட்டிங்கில் மட்டும் அல்லாமல், விக்கெட் கீப்பர் பணியையும் சிறப்பாக செய்து வருகிறார். புனே அணிக்கெதிராக மூன்று வீரர்களை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். பேடடிங்கில் 87 ரன்கள் குவித்தார். நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிராகவும் அரைசதம் அடித்தார்.
இவ்வாறு பேட்டிங் மற்றும் கீப்பிங் பணியில் சிறப்பாக செயல்படும் உத்தப்பா மீது இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டார். மூன்று ஸ்டம்பிங் ஆட்டத்தை எங்கள் பக்கம் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது. அதிரடியாக விளையாடும் டெக்னிக்கை பெற்றுள்ளார். அவர் பந்தை நேராக ஆக அடிக்கும் திறன் பெற்றுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
இவ்வாறு பேட்டிங் மற்றும் கீப்பிங் பணியில் சிறப்பாக செயல்படும் உத்தப்பா மீது இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வாளர்கள் ஒரு கண் வைக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டார். மூன்று ஸ்டம்பிங் ஆட்டத்தை எங்கள் பக்கம் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது. அதிரடியாக விளையாடும் டெக்னிக்கை பெற்றுள்ளார். அவர் பந்தை நேராக ஆக அடிக்கும் திறன் பெற்றுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். தேர்வாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X