search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஒருவர் பலி
    X

    ஜம்மு-காஷ்மீர்: அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஒருவர் பலி

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அக்னூர் செக்டாரில் உள்ள கனசக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #PakistanCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதி மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியான ஜம்மு, காதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த வியாழன் முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கிகள், சிறிய ரக மோட்டார் குண்டுகளால் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கிய அவர்கள், குடியிருப்பு பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. எதிரிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் உள்ள கனசக் பகுதியில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    கடந்த நான்கு நாட்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 7 பொதுமக்கள், 3 ராணுவ வீரர்கள், 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #PakistanCeasefire #tamilnews
    Next Story
    ×