என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன்
Byமாலை மலர்11 Jan 2018 6:42 PM GMT (Updated: 11 Jan 2018 6:42 PM GMT)
ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரும் 16-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்தது. #KartiChidambaram #INXMedia
புதுடெல்லி:
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, மொரிசியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதி பெற்றது. இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கு அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனம், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ,, வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ளது.
இது மட்டுமின்றி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அந்த வகையில், கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக நேற்று ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அதன்படி அவர் நேரில் ஆஜராகவில்லை.
அவர் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவர், இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரியை டெல்லி அலுவலகத்தில் சந்தித்து சில ஆவணங்களை அளித்தார்.இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வரும் 16-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்தது. #KartiChidambaram #INXMedia #tamilnews
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, மொரிசியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதி பெற்றது. இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கு அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனம், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ,, வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ளது.
இது மட்டுமின்றி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அந்த வகையில், கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக நேற்று ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அதன்படி அவர் நேரில் ஆஜராகவில்லை.
அவர் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவர், இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரியை டெல்லி அலுவலகத்தில் சந்தித்து சில ஆவணங்களை அளித்தார்.இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வரும் 16-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்தது. #KartiChidambaram #INXMedia #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X