search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன்
    X

    ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன்

    ஐ.என்.எக்ஸ். ஊடக வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரும் 16-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்தது. #KartiChidambaram #INXMedia
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, மொரிசியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதி பெற்றது. இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கு அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனம், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ,, வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ளது.

    இது மட்டுமின்றி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    அந்த வகையில், கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக நேற்று ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அதன்படி அவர் நேரில் ஆஜராகவில்லை.

    அவர் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவர், இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரியை டெல்லி அலுவலகத்தில் சந்தித்து சில ஆவணங்களை அளித்தார்.இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வரும் 16-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிய சம்மன் பிறப்பித்தது. #KartiChidambaram #INXMedia #tamilnews 
    Next Story
    ×