search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து 10-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தேர்வு
    X

    தொடர்ந்து 10-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தேர்வு

    பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 10-வது முறையாக முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த 12-ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. இதில், தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், தலைவர் பதவிக்கு லல்லு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 10-வது முறையாக லல்லு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997-ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட போது லல்லு பிரசாத் யாதவ் தலைவராக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×