என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் நியமனத்திற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஏற்பு
Byமாலை மலர்9 Nov 2017 8:39 AM GMT (Updated: 9 Nov 2017 8:40 AM GMT)
சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு உள்ளது.
புதுடெல்லி:
சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டிருந்தார்.
அஸ்தானாவின் நியமனம் முறைகேடானது எனவும், விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். சி.பி.ஐ.யின் இரண்டாவது உயரதிகாரி ஒருவரின் நியமனம் முறைகேடான வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நவம்பர் 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டிருந்தார்.
அஸ்தானாவின் நியமனம் முறைகேடானது எனவும், விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். சி.பி.ஐ.யின் இரண்டாவது உயரதிகாரி ஒருவரின் நியமனம் முறைகேடான வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நவம்பர் 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X