search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு ராஜினாமா செய்த ராஜ்யசபா இடத்திற்கான தேர்தல் அறிவிப்பு
    X

    வெங்கையா நாயுடு ராஜினாமா செய்த ராஜ்யசபா இடத்திற்கான தேர்தல் அறிவிப்பு

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜினாமா செய்த ராஜ்யசபா சீட்டுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வெங்கையா நாயுடு தனது பதவியை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு வரை இருந்த போதிலும் துணை ஜனாதிபதியாக தேர்வானதால், எம்.பி பொறுப்பை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, காலியாக உள்ள இந்த பொறுப்புக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலுக்கான அறிவிப்பானை 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் நவம்பர் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×