என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர்: அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறல்
Byமாலை மலர்21 Sep 2017 5:09 AM GMT (Updated: 21 Sep 2017 5:09 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் மற்றும் மாநில போலீசாரும் பலியாகினர்.
இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் படையினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்க்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் மற்றும் மாநில போலீசாரும் பலியாகினர்.
இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் படையினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்க்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X