என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்டிகை காலங்களில் ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்தாகிறது?
புதுடெல்லி:
பண்டிகை காலங்களில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த 40 நாட்களில் வருகின்றன. இதையொட்டி அக்டோபர் 15-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை புதிய ரெயில்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் 3800 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டில் 4000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும் பண்டிகை காலங்களில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ரெயில்வே ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கிறோம். பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்