என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்11 Sep 2017 7:30 AM GMT (Updated: 11 Sep 2017 7:30 AM GMT)
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை வருகிற 18-ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதி துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது. மேலும் வெளிநாடு செல்ல தடை விதித்து லுக் அவுட் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கு தடை விதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு அதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே லுக் அவுட் நோட்டீசு மீதான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் வருகிற 18-ந்தேதிவரை லுக் அவுட் நோட்டீசை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதி துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது. மேலும் வெளிநாடு செல்ல தடை விதித்து லுக் அவுட் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கு தடை விதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு அதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே லுக் அவுட் நோட்டீசு மீதான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் வருகிற 18-ந்தேதிவரை லுக் அவுட் நோட்டீசை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X