என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூர்: கனமழை காரணமாக கார் மீது மரம் விழுந்து விபத்து - மூவர் பலி
Byமாலை மலர்8 Sep 2017 8:51 PM GMT (Updated: 8 Sep 2017 8:51 PM GMT)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு கார் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநில தலைநகரின் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்றிரவு மினர்வா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே காரை நிறுத்தியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த மரம் வேகமாக காரின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரின் உள்ளே இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
காரில் இருந்த மற்ற இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநில தலைநகரின் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்றிரவு மினர்வா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே காரை நிறுத்தியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த மரம் வேகமாக காரின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரின் உள்ளே இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
காரில் இருந்த மற்ற இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X