search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு
    X

    பீகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு

    பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.

    லக்னோ:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 341 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பீகாரின் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 86 பேர் பலியாகி உள்ளனர். இரு மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×