என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ் காந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி புகழாரம்
Byமாலை மலர்20 Aug 2017 6:28 AM GMT (Updated: 20 Aug 2017 6:28 AM GMT)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான இன்று பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராஜீவ் காந்தி நினைவிடமான வீரபூமியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி உள்பட பலர் வந்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், ’ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தில் அவரது நினைவை போற்றுவோம். அவர் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வோம்’ என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராஜீவ் காந்தி நினைவிடமான வீரபூமியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி உள்பட பலர் வந்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், ’ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தில் அவரது நினைவை போற்றுவோம். அவர் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வோம்’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X