என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் - பீகார் எல்லை பகுதியில் 15 பேரை தாக்கி கொன்ற யானை சுட்டுக் கொலை
Byமாலை மலர்12 Aug 2017 12:41 PM GMT (Updated: 12 Aug 2017 12:41 PM GMT)
ஜார்கண்ட் - பீகார் எல்லை பகுதியில் 15 பேரின் உயிரை பறித்த யானையை காட்டிலா அதிகாரிகள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சுட்டு கொன்றனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25 வயது மதிக்கத்தக்க யானை கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பல வீடுகளை தும்சம் செய்தது. மேலும் 11 பேர் யானை தாக்கியதால் பரிதாபமாக பலியாகினர்.
அதே போல் பீகார் மாநிலத்தில் 4 பேர் இந்த யானை தாக்கி மரணமடைந்தனர். இதன் காரணமாக யானையை சுட்டு கொல்ல ஜார்க்கண்ட் மாநில அரசு காட்டிலாகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வன அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சுடுபவர்கள் இணைந்து யானையை கொல்ல முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் யானையை சுட்டு கொன்றனர்.
இதுகுறித்து துப்பாக்கி சுடுபவரான ஷபாத் அலி கான் பேசுகையில், முதலில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஆனால் யானை மயக்கமடையவில்லை. அதன் பின் துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது என கூறினார்.
மேலும் இறந்த யானையின் உடலை காட்டின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்போவதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25 வயது மதிக்கத்தக்க யானை கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பல வீடுகளை தும்சம் செய்தது. மேலும் 11 பேர் யானை தாக்கியதால் பரிதாபமாக பலியாகினர்.
அதே போல் பீகார் மாநிலத்தில் 4 பேர் இந்த யானை தாக்கி மரணமடைந்தனர். இதன் காரணமாக யானையை சுட்டு கொல்ல ஜார்க்கண்ட் மாநில அரசு காட்டிலாகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வன அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சுடுபவர்கள் இணைந்து யானையை கொல்ல முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் யானையை சுட்டு கொன்றனர்.
இதுகுறித்து துப்பாக்கி சுடுபவரான ஷபாத் அலி கான் பேசுகையில், முதலில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஆனால் யானை மயக்கமடையவில்லை. அதன் பின் துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது என கூறினார்.
மேலும் இறந்த யானையின் உடலை காட்டின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்போவதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X