என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘செல்பி’ மோகத்தால் 3 நர்சிங் மாணவிகள் அணையில் மூழ்கி பலி
Byமாலை மலர்3 July 2017 12:37 AM GMT (Updated: 3 July 2017 12:38 AM GMT)
‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
நாக்பூர்:
‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் அணையில் ‘செல்பி’ எடுக்க விரும்பினர். தண்ணீரில் இறங்கி 3 பேரும் செல்பி எடுத்தனர்.
அப்போது ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன மற்ற 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக 3 பேரும் அணையில் மூழ்கி தத்தளித்தனர்.
இதை பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவன், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான். ஆனால் அவனும் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் 4 பேரும் அடுத்தடுத்து அணையில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனைவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் அணையில் ‘செல்பி’ எடுக்க விரும்பினர். தண்ணீரில் இறங்கி 3 பேரும் செல்பி எடுத்தனர்.
அப்போது ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன மற்ற 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக 3 பேரும் அணையில் மூழ்கி தத்தளித்தனர்.
இதை பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவன், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான். ஆனால் அவனும் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் 4 பேரும் அடுத்தடுத்து அணையில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனைவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X