search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் தொழுகையில் முதல் மந்திரி யோகி பங்கேற்காதது ஏன்?: அகிலேஷ் கேள்வி
    X

    ரம்ஜான் தொழுகையில் முதல் மந்திரி யோகி பங்கேற்காதது ஏன்?: அகிலேஷ் கேள்வி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் நடந்த ரம்ஜான் தொழுகையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    அப்போது, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முன்னாள் முதல்வரான நான் இந்த தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இப்போது முதல் மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் கலந்து கொள்ளவில்லை? இதற்கு அவர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

    மேலும், காஷ்மீரில் நடந்து வரும் கலவரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ், ’’மத்திய அரசு  நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்லாமியர்கள் பண்டிகையான ரம்ஜான் தொழுகையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×