என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடியாத்தம் அருகே வீட்டில் நகை கொள்ளை
குடியாத்தம்:
குடியாத்தம் போடிப்பேட்டை உத்தாரி செங்கலப்ப தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது44). கன்னிகாபுரம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார். இதை பயன்படுத்தி மர்ம கும்பல் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்குள்ள 5 அறைகளின் கதவுகளை உடைத்தனர். மேலும் பீரோவில் இருந்த 20பவுனுக்கும் மேற்பட்ட நகை, ரூ75 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை சரவணன் வீட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் திடுக்கிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை நடந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தகவல் சரவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கோவையில் இருந்து வந்த பிறகு வீட்டில் கொள்ளை போன நகை, பணம் விவரம் தெரியவரும் எனபோலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் பைபாஸ் ரோட்டில் விஜய விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி விஜயகுமார் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்