search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை மோசமாக சித்தரித்து பேஸ்புக்கில் படம் வெளியிட்ட புதுவை வாலிபர் கைது
    X

    காதலியை மோசமாக சித்தரித்து பேஸ்புக்கில் படம் வெளியிட்ட புதுவை வாலிபர் கைது

    திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை மோசமாக சித்தரித்து பேஸ்புக்கில் படம் வெளியிட்ட புதுவை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் - வில்லியனூர் ரோட்டை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கார் வாங்கி-விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    சிலகாலம் வினோத்குமாரிடம் பழகி வந்த அந்த பெண் வினோத்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.

    இதற்கிடையே அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து வினோத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் பேஸ்புக்கில் அந்த பெண்ணின் படத்துடன் ‘கால் கேள்’ என பதிவு செய்து வெளியிட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×