search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி
    X

    ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி

    அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கூறினார்.

    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுபற்றி உண்மை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் தொடர்பு உடையவர்களையும், அவருக்கு சிகிச்சை அளித்தவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார்.


    ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டுள்ளது.

    அந்த ஸ்டீராய்டு மருந்து சற்று அதிக அளவில் கொடுக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு டாக்டர் சங்கர் கூறினார்.

    Next Story
    ×