search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,384 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,384 கன அடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,384 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,384 கன அடியாக  மேலும் அதிகரித்துள்ளது.

    நேற்று 4,493 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5,384 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 76.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 77.16 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×