search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே கருப்பு மழை பெய்ததால் மீனவர்கள் அதிர்ச்சி
    X

    சீர்காழி அருகே கருப்பு மழை பெய்ததால் மீனவர்கள் அதிர்ச்சி

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே மழைநீர் கருப்பு நீராக மாறிய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமங்களான மடவாமேடு சுனாமி நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்று காலை மீனவர் குடியிருப்பு பகுதியில் மழை பெய்தது. அப்போது மீனவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் தேங்கியிருந்த மழைநீர் கருப்பு நிறமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கருப்பு நிறமான மழைநீரை கீழே ஊற்றிவிட்டு மீண்டும் பாத்திரங்களை வீட்டின் மாடி பகுதியில் வைத்தனர்.

    10 நிமிடத்துக்கு பின்னர் மீண்டும் சென்று பார்த்த போது அனைத்து பாத்திரங்களிலும் தேங்கியிருந்த மழைநீர் கருப்பாகவே இருந்தது. இதை பார்த்து மீனவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மழைநீர் கருப்பு நீராக மாறிய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×