search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
    X

    கடலூர் மாவட்டத்தில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

    கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கும், நில எடுப்பு தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசு கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கடலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏட்டு சரவணன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஒரத்தூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் பாலாஜி சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சஞ்சய்காந்தி, ராஜசேகர், நாகராஜன் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×