search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவிய ஆதார் - உதய் அமைப்பின் சி.இ.ஓ. பெருமிதம்
    X

    காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவிய ஆதார் - உதய் அமைப்பின் சி.இ.ஓ. பெருமிதம்

    கடந்த சில மாதங்களில் காணாமல்போன 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார்.
    உலகளவில் அதிகமான குழந்தைகள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 102 கோடி மக்களில் 40 சதவிதம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டுவரும் சி.ஆர்.ஒய். அமைப்பு, கடந்த 2013 - 2015-ம் ஆண்டிற்குட்பட்ட காலத்தில் நாட்டில் காணமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக நாள்தோறும் 180 குழந்தைகள் காணமல் போகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களில் காணாமல்போன 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் சி.இ.ஓ. அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த சைபர்ஸ்பேஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த சில மாதங்களில் காணாமல் போன 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் ஆதார் விவரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் ஆதார் எண், அடையாளம், கைரேகை, கண்விழி ரேகை ஆகியவை மூலம் அவர்களை அடையாளம் காண முடிந்தது.

    ஆதார் எண்ணை பல்வேறு அரசு நலத்திட்டங்களில் இணைத்ததன் மூலம் தவறான வழியில் மானியம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அரசால் சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடிந்தது. அதிகமாக அரசு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வருங்காலத்தில் ஆண்டுக்கு சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும். தற்போது நாட்டில் 99 சதவித இளைஞர்களிடம் ஆதார் எண் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×