search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதுரகிரி மலை ஏறியவர் மாரடைப்பால் பலி
    X

    சதுரகிரி மலை ஏறியவர் மாரடைப்பால் பலி

    சென்னை சேர்ந்த ஒருவர் சதுரகிரி மலையில் ஏறிய போது மாரடைப்பால் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர- சந்தனமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    மலை ஏறும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை காலங்களில் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அமாவாசையையொட்டி ஏராளமானோர் மலை ஏறினர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (வயது65) என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சதுரகிரிக்கு வந்தார். அவர் கோவிலுக்கு செல்ல மலை ஏறினர்.

    சின்னபசுக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று திருமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் அங்கு வந்து டோலி மூலம் மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×