search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேடப்பட்டி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    சேடப்பட்டி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

    உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
    பேரையூர்:

    சேடப்பட்டி போலீஸ் சரகத்துக்குபட்ட டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி, தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக சரஸ்வதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். இருப்பினும் நோய் குணமாகவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த சரஸ்வதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் சரஸ்வதியை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×