என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒத்தக்கடை அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி: ஒருவர் படுகாயம்
மேலூர்:
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவரும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நாட்டரசன்கோட்டையை அடுத்துள்ள சாத்தணியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (20), பாண்டி (30) ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று மேலூருக்கு புறப் பட்டனர்.
ஒத்தக்கடை அருகே உள்ள மேலூர்-திருமோகூர் சந்திப்பு ரோட்டில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பழனி யப்பன், தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்