search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் செய்து, நேற்று இரவு அரசு உத்தரவு பிறப்பித்தது.
    சென்னை:

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்ததாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான சபீர் கரீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பணி இடைநீக்கம் செய்து, நேற்று இரவு அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை போலீசார் ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீமின் சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சபீர் கரீமின் தங்கை உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. சபீர் கரீம் ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடிப்பதற்கு அவரது உறவினர்கள் யாராவது உதவியிருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
    Next Story
    ×