என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே விஷம் குடித்த காதல் ஜோடிக்கு தீவிர சிகிச்சை
Byமாலை மலர்30 Oct 2017 2:50 PM GMT (Updated: 30 Oct 2017 2:50 PM GMT)
நெல்லை அருகே விஷம் குடித்த காதல் ஜோடிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குளம்:
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள உகந்தான்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் காளிமுத்து(வயது 21). வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்த இவருக்கும், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த இருவரது வீட்டாரும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை கைவிடவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அந்த மாணவியின் தந்தை, சீதபற்பநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், காளிமுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் பயந்து போன காளிமுத்து நேற்று முன்தினம் மாணவியுடன் ஊருக்கு வந்துள்ளார். ஊரின் ஒரு பகுதியில் வைத்து விஷம் குடித்து இருவரும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள உகந்தான்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் காளிமுத்து(வயது 21). வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்த இவருக்கும், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த இருவரது வீட்டாரும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை கைவிடவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அந்த மாணவியின் தந்தை, சீதபற்பநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், காளிமுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் பயந்து போன காளிமுத்து நேற்று முன்தினம் மாணவியுடன் ஊருக்கு வந்துள்ளார். ஊரின் ஒரு பகுதியில் வைத்து விஷம் குடித்து இருவரும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X