என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியதால் தெப்பம் விட்டு மக்கள் வழிபட்டனர்
Byமாலை மலர்23 Oct 2017 1:34 PM GMT (Updated: 23 Oct 2017 1:35 PM GMT)
சூளகிரி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியதால் அப்பகுதி மக்கள் தலையில் தெப்பம் வைத்து, மாவிளக்குடன் அணையை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு அணை உள்ளது. இந்த அணையானது நீண்ட காலமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சூளகிரி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக சின்னாறு அணையில் நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு அணையும் முழுமையாக நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நேற்று அணையருகே உள்ள வேம்பள்ளி, இண்டிகானூர், கிருஷ்ணேபள்ளி, கூராக்கலபள்ளி மற்றும் தேக்கலபள்ளி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று கங்கையம்மனை வழிபட்டனர்.
மேலும், கோவில் பூசாரிக்கு பெண் வேடமிட்டு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆடு வெட்டி, அதன் தலையை தெப்பத்தில் வைத்து, மாவிளக்குடன் அணையை சுற்றி 3 முறை வலம் வந்தனர். பின்னர் வெட்டப்பட்ட கிடாவை, கிராம மக்கள் பங்கு போட்டு எடுத்துச்சென்றனர். இதில், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு அணை உள்ளது. இந்த அணையானது நீண்ட காலமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சூளகிரி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக சின்னாறு அணையில் நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு அணையும் முழுமையாக நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நேற்று அணையருகே உள்ள வேம்பள்ளி, இண்டிகானூர், கிருஷ்ணேபள்ளி, கூராக்கலபள்ளி மற்றும் தேக்கலபள்ளி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று கங்கையம்மனை வழிபட்டனர்.
மேலும், கோவில் பூசாரிக்கு பெண் வேடமிட்டு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆடு வெட்டி, அதன் தலையை தெப்பத்தில் வைத்து, மாவிளக்குடன் அணையை சுற்றி 3 முறை வலம் வந்தனர். பின்னர் வெட்டப்பட்ட கிடாவை, கிராம மக்கள் பங்கு போட்டு எடுத்துச்சென்றனர். இதில், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X