search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
    X

    திருவண்ணாமலையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

    திருவண்ணாமலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, கொள்ளையடித்து சென்றுவிட்டனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை வேங்கிகால் தேவராஜன் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டனர். நேற்று மர்ம நபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் மாணிக்கத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அவர் வந்து பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    வேங்கிகால் செல்வா நகரை சேர்ந்தவர் முரளிதரன் (38) பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

    மர்ம நபர்கள் வீட்டில் பூட்டை உடைத்து புகுந்து அங்கிருந்த 2 லேப்-டாப் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். வேங்கிகாலில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கிழக்கு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×