search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தியவர் கைது
    X

    சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தியவர் கைது

    சங்கரன்கோவில் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 55). இவர் சம்பவத்தன்று ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதியில் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சங்கரன்கோவில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் போலீசார் செந்தூர்பாண்டியிடம் உரிய ஆவணங்களை கேட்டனர்.

    அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய அனுமதி இன்றி மணல் அள்ளியதாக செந்தூர்பாண்டியை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×