search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளரை மாற்ற வேண்டும்: கவர்னர் கிரண்பேடி மீண்டும் போர்க்கொடி
    X

    தலைமை செயலாளரை மாற்ற வேண்டும்: கவர்னர் கிரண்பேடி மீண்டும் போர்க்கொடி

    தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் அவருக்கும், தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. எந்த விவகாரத்திலும் கவர்னர் கிரண்பேடியை சந்திப்பதை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தவிர்த்து வந்தார்.

    இதற்கிடையே தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை மாற்ற வேண்டும் என பல முறை கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை மாற்ற வேண்டும் என மீண்டும் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-

    புதுவை நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. குறிப்பாக நகராட்சி சேவைகள், சுகாதார துறை இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை.

    இது, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியாகும். இதனை யாரும் ஊக்குவிக்கவில்லை. இது மட்டுமின்றி சரியாகவும் செயல்படுத்தவில்லை. இதனால் புதுவை மக்கள் தான் கஷ்டப்படுகின்றனர்.

    இந்த மாநிலத்தை பொறுத்த வரை தற்போதைய தலைமை செயலாளர் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த அவர் தவறி விட்டார். துறைகளின் செயல்பாட்டையும் அவர் சரியாக கண்காணிக்கவில்லை.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    Next Story
    ×