என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்து 15 பேர் காயம்
Byமாலை மலர்28 Sep 2017 12:03 PM GMT (Updated: 28 Sep 2017 12:03 PM GMT)
பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலார்கள் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி:
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த கரும்பு லோடு மேற்பகுதியில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் 18 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். லாரியை கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை பாலக்கோடு அருகே உள்ள பாரதிநகர் வளைவில் லாரி வந்தபோது திடீரென லாரி கவிழ்ந்தது. இதில் லாரி லோடு மேல் அமர்ந்திருந்த 18 பேரில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்த இவர்கள் பாலக்கோடு மற்றும் கவுண்டம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X