search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு - 2 நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
    X

    வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு - 2 நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி உள்ளார்.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும். மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, பெங்களூரில் 11 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 24 வரை 39 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 31 சதவீதம் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×