என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதல்: எம்.எல்.ஏ.வின் மைத்துனர் பலி
திருக்கனூர்:
திருக்கனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன் கவுண்டர். பஸ் உரிமையாளர். இவரது மகன் குமரன் (வயது 46). இவர் மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர். செல்வத்துக்கு மைத்துனர் ஆவார்.
திருக்கனுர் பகுதியில் விவசாயம் செய்து வந்த குமரன் தனது பிள்ளைகளின் படிப்பு வசதிக்காக வாணரப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று இரவு குமரன் திருக்கனூரில் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி விட்டு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வழுதாவூர்- குமராப் பாளையம் இடையே ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான குமரனுக்கு தேவசேனா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்