search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை 69 அடியை தொட்டது
    X

    பவானிசாகர் அணை 69 அடியை தொட்டது

    பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை மற்றும் அப்பர் பவானி, குந்தா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    இதையொட்டி பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை 8 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5226 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 68.51 அடியில் இருந்து மதியம் 12 மணியளவில் இது 68.80 அடியானது இன்று மாலை நீர்மட்டம் 69 அடியை தாண்டி நாளைக்குள் 70 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டினால் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுவது உறுதி என்பதால் விவசாயிகள் தண்ணீர் திறப்பு தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×