search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயண பிரசாரம்
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயண பிரசாரம்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடைபயண பிரசாரம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி நடைபயண பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    பிரசாரம் கள்ளூரில் தொடங்கி, வெற்றியூர், சாத்தமங்கலம், கீழப்பழுவூர், வண்ணம்புத்தூர், தட்டாண்சாவடி, கீழகாவட்டாங்குறிச்சி, சேனாபதி வழியாக முடிகொண்டானில் வந்து நிறைவடைந்தது.

    பிரசாரத்தில், மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மக்களுக்காக செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
    Next Story
    ×